"அக்கிரமங்கள் நிறைந்த இன்றைய அரசியல் களம் ஒரு சூதாட்டங்கள் நிறைந்த கொலைக்களம். அதில் ஒரு சிறிய தீப்பொறியை அணைக்க முற்பட்டு, அதன் தொடர்ச்சியாக நடப்பதெல்லாம் அதை காட்டுத்தீயாக மாற்றுகிறது. விறுவிறுவென நடக்கும் கண்ணுக்கு தெரியாத யுத்தத்தில் யாரெல்லாம் பகடைக்காய்களாக மாறுகிறார்கள் யாரெல்லாம் உயிரை இழக்கிறார்கள் என்பதை அறிய அறிய இதயம் பதைபதைப்புக்கு உள்ளாகும். திசைமாறிப் போகும் ஒரு சாதாரண கொலை வழக்கை ம...